சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.3.56 அளவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வரும் நட்டத்தை சரி செய்ய பெட்ரோல் விலையை உயர்த்துமாறு கோரி வரும் நிலையில், விரைவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள இந்த விலை உயர்வை அறிவிக்க மத்திய அரசு அனுமதி அளிக்குமா என்பது இன்னும் முடிவாகவில்லை.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.7 அளவுக்கு விலையை உயர்த்தி 2 மாத காலத்துக்குள் 3 ரூபாயை உயர்த்துவது என்பது மிக மோசான முடிவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த விலை உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் என்பது மட்டும் உறுதி.
No comments:
Post a Comment