Sunday, 30 September 2012

தாண்டவம் - திரைபட விமர்சனம்

ஏற்கனவே ‘தெய்வத்திருமகள்’ல அழகியலா கமர்ஷியல் படத்தைத் தந்த டைரக்டர் விஜய்யும், ச்சீயானும் கைகோர்த்த படம்கிறதால இந்தப்படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.
ஹீரோவுக்கான எந்த எதிர்பார்ப்பையும் பில்டப்புகளையும் ஏத்துக்காம தன் கேரக்டருக்கு நியாயம் தர்ர விக்ரம், அமைதியா லண்டன்ல அறிமுகமாகி ஒருத்தனைப் போட்டுத்தள்ற வரை அவர் பார்வையில்லாதவர்ன்னு நமக்குத் தெரியறதில்லை.

அது ஸ்கிரீன்பிளேவோட சுவாரஸ்யம்னா அது நமக்குப் புரிஞ்சதும் பார்வையில்லாதவரா ஏற்கனவே நாம அவரைப் பார்த்திருக்கிற ‘காசி’யை நினைவுபடுத்திடாம இன்னொரு டைமன்ஷன் காட்டியிருக்கிறது நடிப்புல அவர் எல்லா நடிகர்களுக்கும் ‘ச்சீயான்’தான்னு ஒத்துக்க வைக்குது.
சர்ச்சுல பியானோ கலைஞரா வர்ர அவர் கீபோர்டுல ஏறி வர்ர எறும்புக்கும் ஊறு செய்யாம அதை லாவகமா எடுத்து விடற காட்சி சின்ன அதிர்வையும் உணர்ந்துகிற அவரோட நுண்ணறிவையும், பரோபகார உள்ளத்தையும் சொல்லிடுது.

டி-20 உலகக்கோப்பை-ஆஸ்திரேலியாவிடம் தென்னாப்பிரிக்கா படுதோல்வி!

இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்றில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. தென் ஆப்ரிக்கா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சில் ஆஸ்திரேலியா அணி சார்பாக டுகார்டி 3 விக்கெட்டுகளும், ஷேன் வாட்சன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

Wednesday, 22 August 2012

டீசல், காஸ், கெரசினுக்கு மானியம் வாபஸ் ஆகாது

டீசல், சமையல் காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் மீதான விலை கட்டுப்பாட்டை அரசு கைவிடாது. அவற்றுக்கு மானியம் தொடரும் என்று பெட்ரோலிய துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் தெரிவித்தார். மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு: டீசல், சமையல் காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் விலை மீதான கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்ளும் திட்டம் அரசிடம் இல்லை. அவற்றுக்கான மானியம் தொடரும். 

டீசல், காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்கள் அதிக இழப்பை ஏற்று வருகின்றன. 2011,12ம் ஆண்டில் இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மீது ஏற்பட்ட மொத்த இழப்பு ரூ.1,38,541 கோடி. அதை சமாளிக்க எண்ணெய் கம்பெனிகளுக்கு பட்ஜெட் மானியம் தவிர, அரசு ரூ.83,500 கோடி நிதி அளித்தது. 

வாள் சண்டையால் 2 நாள்கள் அவதிப்பட்டேன்! - ஸ்ரேயா

படத்துக்காக வாள் சண்டை போட்டதால் கையில் வலி ஏற்பட்டு 2 நாள்கள் அவதிப்பட்டேன் என்றார் ஸ்ரேயா. தமிழ், கன்னடத்தில் உருவாகும் படம் சந்திரா. இதில் ராணி வேடத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. 

கதைப்படி இப்படத்துக்காக களறி சண்டை காட்சியில் ஸ்ரேயா நடிக்க வேண்டும். இக்காட்சியை மைசூரில் உள்ள கோயில் ஒன்றில் படமாக்கினர். அப்போது எதிரி படையை சேர்ந்தவர்களுடன் ஸ்ரேயா வாள் சண்டை போட வேண்டும். ஸ்ரேயாவிடம் தரப்பட்ட வாள், அதிக கனமாக இருந்ததாம். கஷ்டப்பட்டு தூக்கி நடித்ததால் கையில் வலி ஏற்பட்டு அவதிப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

ஏக் தா டைகர்' தமிழ் ரீமேக்கில் விஜய்?

ஐந்து நாட்களில் 100 கோடியை வசூல் செய்து சாதனைப் படத்திருக்கும் சல்மான்கானின் படமான 'ஏக் தா டைகர்' இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

'துப்பாக்கி' படத்திற்குப் பிறகு கெளதம் மேனன் படத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. பல காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது. அதனால் அந்த படத்திற்கு கொடுத்த கால்ஷீட்டை 'ஏக் தா டைகர்' படத்தின் ரீமேக்கிற்கு விஜய் கொடுத்திருக்கிறாராம். இந்த படத்தை தமிழில் இயக்குநர் ஜெயம் ராஜா இயக்கப் போகிறாராம்.

இந்தியா அணு ஆயுத நாடாக மாறியதால் உலக நாடுகள் மிரட்டுவது தடுக்கப்பட்டது - தேசிய பாதுகாப்பு செயலாளர் அறிவிப்பு


அணுகுண்டுகளை கைவசம் வைத்திருந்த வல்லரசு நாடுகள் முன்பு ஏழை மற்றும் வளரும் நாடுகளின் மீது தங்களின் ஆதிக்கத்தை செழித்து வந்தன. அப்போது இந்தியாவும் இந்த மிரட்டல்களை மூன்று முறை சந்தித்தது.
அணு ஆயுதமற்ற உலகம் படைக்க விரும்பிய மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களால் ராஜீவ் ஆக்ச்ன் ப்ளான் கொண்டுவரப்பட்டது. அதன் 24ம் ஆண்டு நினைவாக அணு ஆயுதமற்ற உலகம் என்னும் தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது.

Monday, 20 August 2012

நாள் ஒன்றுக்கு 5 எஸ்.எம்.எஸ்.க்கு மேல் அனுப்ப தடை: செல்போன் நிறுவனங்கள் அறிவிப்பு


வதந்தி பரவுவதை தடுக்க நாள் ஒன்றுக்கு 5 எஸ்.எம்.எஸ்.க்கு மேல் அனுப்ப தடை நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. மத்திய அரசிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை இந்த நிலை தொடரும் என்று செல்போன் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் குறித்த வதந்தி செய்தியால் ஒரு நாளைக்கு 5 எஸ்.எம்.எஸ்.களுக்கு மேல் அனுப்ப தடை விதித்துள்ளது செல்போன் நிறுவனங்கள்.