டீசல், சமையல் காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் மீதான விலை கட்டுப்பாட்டை அரசு கைவிடாது. அவற்றுக்கு மானியம் தொடரும் என்று பெட்ரோலிய துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் தெரிவித்தார். மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு: டீசல், சமையல் காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் விலை மீதான கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்ளும் திட்டம் அரசிடம் இல்லை. அவற்றுக்கான மானியம் தொடரும்.
டீசல், காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்கள் அதிக இழப்பை ஏற்று வருகின்றன. 2011,12ம் ஆண்டில் இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மீது ஏற்பட்ட மொத்த இழப்பு ரூ.1,38,541 கோடி. அதை சமாளிக்க எண்ணெய் கம்பெனிகளுக்கு பட்ஜெட் மானியம் தவிர, அரசு ரூ.83,500 கோடி நிதி அளித்தது.
டீசல், காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்கள் அதிக இழப்பை ஏற்று வருகின்றன. 2011,12ம் ஆண்டில் இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மீது ஏற்பட்ட மொத்த இழப்பு ரூ.1,38,541 கோடி. அதை சமாளிக்க எண்ணெய் கம்பெனிகளுக்கு பட்ஜெட் மானியம் தவிர, அரசு ரூ.83,500 கோடி நிதி அளித்தது.
No comments:
Post a Comment